பெண்கள் முன்னேற்றத்திற்கான தெரபத் மஹிலா மண்டல் சார்பில் "ஸ்ரீ உட்சவ் 2017"


சமூகத்தில் மாற்றம் உருவாக்குவதற்கான தீர்வை வழங்குவதில் இலாப நோக்கமற்ற நிறுவனமாக தெரபத் மஹிலா மண்டல் செயல்படுகிறது. இதில் ஸ்வஸ்த் பரிவார் ஸ்வஸ்த் சமாஜ், கனியா சூரகாஷா யோஜனா, மருத்துவ முகாம்கள், கிராமப்புறங்களில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது போன்ற பல்வேறு முயற்சிகளால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த அமைப்பு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது.



இந்த ஆண்டு டி.எம்.எம், ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ தொடங்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் ஏ.கே.எஸ். நகர், தெரபந்த் ஜெயின் பானில் ஜூன் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு "ஸ்ரீ உட்சவ் 2017" நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், 55 கடைகளில் காலணிகள், துணிகள், குழந்தை தயாரிப்புகள், சுற்றுச்சூழல் பசுமைப் பொருட்கள் மற்றும் இன்னும் பலவகையான கைவினைப்பொருட்கள் என கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இது குறித்து டிஎம்எம் செயலாளர் மோனிகா லுமியா பேசுகையில்; "நாங்கள் டிஎம்எம்லிருந்து பல்வேறு சமூகநலத் திட்டங்களை செய்து வருகிறோம், நாங்கள் முதன் முறையாக ஸ்ரீ உட்சவ் 2017 எக்ஸ்போவை ஏற்பாடு செய்திருக்கிறோம், இந்த வகையான  எக்ஸ்போ பெண்கள் தொழில்முயற்சியாளர்களுக்கான புதிய தளத்தை வழங்க உதவுகிறது. கொங்கு பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தொழில் முனைவோர் உள்ளனர். ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ எங்களுக்கு தேவையான நிதி திரட்ட உதவும் என நாங்கள் நம்புகிறோம். என்றார்.

இக்கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...